தேசியவாத காங்கிரஸ் தலைவர் படுகொலை: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

By KU BUREAU

சென்னை: தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் பிரிவு தலைவர் பாபா சித்திக் படுகொலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் பிரிவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், மும்பை பாந்த்ரா பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் பிரிவின் தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளானேன். குடிமை சமூகத்தில் இதுபோன்ற வன்முறை செயல்களுக்கு இடமில்லை. இது கடும் கண்டனத்துக்குரியது. பாபா சித்திக்கின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE