சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்: சிஐடியுவுக்கு தொமுச வேண்டுகோள்

By KU BUREAU

சென்னை: சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை ஊதி பெரிதுபடுத்துவதை விடுத்து தீர்வு காண முயற்சிக்கும்படி சிஐடியுவுக்கு தொமுச பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பேரவை வெளியிட்ட அறிக்கை: சர்வதேச தொிழலாளர் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் 1949 முதல் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேரம் ஆகிய தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில்தான் சங்கங்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி பதிவு செய்யப்படுவதுடன், பேச்சுவார்த்தைக்கு வராத நிர்வாகத்தை அழைத்து பேசப்படுகிறது. இதை மறந்து சாம்சங் பிரச்சினையை மிகவும் பெரிதுபடுத்தி அதனை முடிவுக்கு கொண்டுவர இயலாத நிலைக்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

சங்கத்தை அங்கீகரிக்கும் சட்டம் இல்லை சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் துறையில் தாமதமானதால் நீதிமன்றம் சென்று, வழக்கை தேக்க நிலையில் வைத்துவிட்டு தொழிலாளர் துறை பதிவு எண் வழங்கவில்லை என்று அரசின் மீது குற்றம் சொல்கிறீர்கள். இதில் என்ன நியாயம் உள்ளது. தீர்ப்பு வந்ததும் பதிவு எண் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்திலும், இந்தியாவிலும் எந்த ஒரு சங்கத்தையும் அங்கீகரிப்பதற்கான சட்டம் தற்போது இல்லை. சட்டமே இல்லாத போது சட்டப்படி அரசு நடக்கவில்லை என குறை கூறலாமா? ஊதிய உயர்வு கோரிக்கையில் சாம்சங் நிறுவனத்தை நிர்பந்தித்து நிவாரணமாக ரூ.5,000 மற்றும் நீங்கள் வைத்த மற்றும் வைக்காத கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொழிலாளர் ஆதரவு நிலைப்பாடு இல்லையா? சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன இதை மறைத்து புதிய கோணத்தில் அரசை நிர்வாக ஆதரவு நிலை எடுப்பது போல் சித்தரித்து போராட்டத்தை பெரிதுபடுத்தி சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினை தரம் தாழ்ந்து பேசுவதும், அவரை விமர்சிப்பதும், பிரச்சினைக்கு தீர்வு காண சரியாக இருக்குமா, அரசின் தீர்வு முயற்சிகளுக்கு உறுதுணையாக தொமுச பேரவை செயல்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்காமல் முடிவுக்கு கொண்டுவர தங்கள் அனுபவத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE