“தக்காளி, வெங்காயம் விலையை கட்டுக்குள் வைக்க அரசு முயற்சி” - அமைச்சர் பெரியகருப்பன் உறுதி

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: “தக்காளி, வெங்காயம் விலையை கட்டுக்குள் வைக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது” என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தக்காளி, வெங்காயம் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பசுமை பண்ணை மூலம் தலைநகரான சென்னையில் விலையை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுச் சங்க தேர்தலை அதற்கான தேர்தல் ஆணையம் தான் நடத்த வேண்டும். தேர்தலை அரசு ஒத்துழைப்பு தான் தர முடியும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE