ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை தொடக்கம்

By KU BUREAU

சென்னை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு, கார விற்பனை தொடங்கியுள்ளது. ஆவின் நிறுவனம் நிகழாண்டில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக, ஆவின் ஒன்றியங்களில் பால் பொருட்கள், இனிப்பு வகைகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது ஆயுதபூஜை, தீபாவளிடைய முன்னிட்டு, ஆவின்பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. நெய் பாதுஷா (250 கிராம்), நட்ஸ் அல்வா (250 கிராம்) ஆகியவை தலா ரூ.190 விலையில் கிடைக்கும்.

இதுதவிர, 250 கிராம் காஜூ பிஸ்தா ரோல் ரூ.320-க்கும், 250 கிராம் காஜூ கட்லி ரூ.260-க்கும், 250 கிராம் மோதி பாக் ரூ.180-க்கும் கிடைக்கும். இதுதவிர, 200 கிராம் ஆவின் மிக்சர் ரூ.100-க்கும், 200 கிராம் பட்டர் முருக்கு ரூ.80-க்கும் கிடைக்கும். பண்டிகை காலத்தில் வெண்ணெய், நெய் ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹைடெக் ஆவின் பாலகங்களில் ஒரு லிட்டர் நெய் வாங்கினால் ரூ.10 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆவின் இனிப்பு, கார வகைகள் பொருத்தவரை, ரூ.1 லட்சத்துக்கும் மேல் `பல்க்' புக்கிங் செய்தால்,குறிப்பிட்ட சதவீதத்தில் தள்ளுபடி வழங்கப்படும். தீபாவளி வரை அமலில் இருக்கும். பண்டிகைக் காலத்தில் ஆவின் பால் பொருட்களுடன் இனிப்பு வகைகள், கார வகைகள் ஆகியவற்றின் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE