தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: கைதானவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

By KU BUREAU

சென்னை: தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில், கைதானவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவாக யூடியூப்பில் பிரச்சாரம் செய்ததாகவும், தீவிரவாத இயக்கத்தில் சேருமாறு இளைஞர்களை மூளைச் சலவை செய்ததாகவும், இந்திய அரசுக்கு எதிராக சதி செயலில் ஈடுபட ரகசிய கூட்டம் நடத்தியதாகவும் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன்உள்பட 6 பேர் கடந்த ஜூன் மாதம்சென்னை சைபர் க்ரைம் போலீஸா ரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு என்ஐஏவுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டு, 2 தினங்களுக்கு முன்னர் சென்னை தரமணியைச் சேர்ந்த ஃபைசல் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நேற்று எஸ்பிஐ வங்கி அதிகாரிகளுடன் சென்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பல மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில், வழக்குத் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE