குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி - வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை!

By KU BUREAU

சென்னை: 2025-க்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) தேர்வுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

எந்தெந்த பதவிகளுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில் குருப்-1 தேர்வு, குருப்-4, குருப்-2 மற்றும் 2-ஏ தேர்வு, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு உள்பட மொத்தம் 7 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.

2025ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையின்படி, குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன் 15ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 13ம் தேதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியாகும் எனவும், தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும். தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE