கடலூர் அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து - டிஎஸ்பி படுகாயம்

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் அருகே ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் டிஎஸ்பி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி-யாக இருப்பவர் ராமதாஸ். இவர் இன்று காலை சிதம்பரத்திலிருந்து இருந்து ஜீப்பில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தார். ஓட்டுநர் காவலர் அருண்பாண்டியன் ஜீப்பை ஒட்டி வந்தார். ஜீப் கடலூர் செம்மங்குப்பம் அருகே வந்த போது குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க ஓட்டுநர் ஜீப்பை திருப்பி உள்ளார்.

இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாகச் சென்று சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் டிஎஸ்பி ராஜேந்திரன், ஓட்டுநர் அருண்பாண்டியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர் .அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE