நாகை அருகே விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்

By KU BUREAU

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்புலம் பகுதியைச் சேர்ந்தவர் ஓ.எஸ்.மணியன் (70). அதிமுக முன்னாள் அமைச்சரான இவர், தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இவர் நேற்று காலை காரில் நாகை சென்று கொண்டிருந்தார்.

திருப்பூண்டி காரைநகர் அருகே சென்றபோது, எதிரே தாறுமாறாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் காரை வேகமாகத் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த கோயில் மதில் சுவற்றின்மீது மோதி, விபத்துக்குள்ளானது. மேலும், அங்கு நின்று கொண்டிருந்த திருப்பூண்டியைச் சேர்ந்த பாப்பா (60) என்பவர் மீதும் கார் மோதியது.

விபத்தில் ஓ.எஸ்.மணியன், கார் ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த அன்பழகன் (38), பாப்பா ஆகியோர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE