கோவை - சென்னை எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

By KU BUREAU

கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை-சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் 6-ம் தேதி (நாளை) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06171) கோவையில் இருந்து அக்டோபர் 6-ம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

சென்னை எழும்பூர்-போத்தனூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06172) சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 7-ம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூரில் நின்று செல்லும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE