சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த மறுப்பு

By KU BUREAU

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.யாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் பொன் மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் பொன்மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முன்ஜாமீன் வழங்கியது. அப்போது 4 வாரங்களுக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, தினமும் கையெழுத்திட வேண்டும் என அவருக்கு நீதிபதி நிபந்தனை விதித்தார்.

இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன்.மாணிக்கவேல் மனுதாக்கல் செய்தார். மனுவை நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி விசாரித்தார். பின்னர் நீதிபதி, "செப். 14 முதல் 4 வாரங்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட மனுதாரருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையில் தளர்வு வழங்க முடியாது.விசாரணை அக்.14-க்கு தள்ளிவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE