இலங்கை சிறையிலிருந்து மீனவர்களை விடுவிக்க கோரிக்கை: ராமேசுவரம் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்!

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டதில் ஈடுபட உள்ளதாகவும், நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை கடந்த செப்டம்பர் 29 அன்று எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதிலிருந்த 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் அருகே மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் மீனவப் பிரநிதிநிதி சேசுராஜா தலைமையில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும். இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தப்பட வேண்டும், பாரம்பரியமான கச்சத்தீவு கடற்பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நாளை முதல் (புதன்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், வியாழக்கிழமை தங்கச்சிமடத்தில் உண்ணவிரதப் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE