திருவள்ளூர் | அரசு பள்ளி, கிளை நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

By KU BUREAU

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி, வட்டாரக் கல்வி அலுவலகம், கிளை நூலகம் உள்ளிட்டவற்றில் நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, திருத்தணி, திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார்.

ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் நடந்த ஆய்வில், ஆவடி கிளை நூலகத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, புதிய நூலகம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்வதாக வாசகர்களுக்கு உறுதியளித்தார். பிறகு, அவர் நூலகத்துக்கு அருகில் உள்ளஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தையும் ஆய்வு செய்தார்.

திருத்தணி வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டு வரும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டிடம் அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE