காந்தி ஜெயந்தி விழா: ஆளுநர் மாளிகை அழைப்பு

By KU BUREAU

சென்னை: கிண்டி காந்தி மண்டபத்தில் நாளை நடைபெறும் காந்தி பிறந்தநாள் விழாவில் பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், அக்.2-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு அடையாறு காந்தி மண்டபத்தில் காந்தியடிகளின் பிறந்த நாள் விழா ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று காதி கிராமோத்யோக் பவன் நடத்திய மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்குகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE