கொடைக்கானல் செல்ல இ-பாஸ் முறை தொடரும்: ஆட்சியர்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறும் நடைமுறை தொடரும் என திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை கடந்த மே 7ம் தேதி செப்டம்பர் 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை, சென்னை உயர்நீதிமன்றம் மறுஉத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது. எனவே, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள epass.tnega.org என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்.

மேலும் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பாஸ் (Local ePass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் : 0451-2900233, 9442255737 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE