குளத்தில் அசையாமல் கிடந்த போதை ஆசாமி: இறந்துவிட்டதாக நினைத்து உடலை இழுத்த போலீஸாருக்கு அதிர்ச்சி; வைரல் வீடியோ!

By வ.வைரப்பெருமாள்

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் குளத்து நீரில் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்த போலீஸார், அந்த நபரை இழுத்த போது, போதையில் உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு உள்ளூர்காரர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தண்ணீரில் மிதந்த வாலிபர் உடலை இழுத்தனர். அப்போது திடீரென அந்த நபர் எழுந்து திரும்பி பார்த்ததால் போலீஸாரும், அவசர கால மீட்பு குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை கரைக்கு கொண்டு வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர் தண்ணீரில் பல மணி நேரம் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அவர் இறந்துவிட்டதாகக் கருதி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது தெரியவந்தது.

மேலும், அந்த நபர் கடந்த 10 நாட்களாக கிரானைட் குவாரியில் கொளுத்தும் வெயிலில் 12 மணி நேரம் வேலை செய்ததாகவும், ஓய்வெடுக்கவும் குளிர்ச்சிக்காகவும் தண்ணீரில் இறங்கி படுத்துக் கிடந்ததாகவும் போலீஸாரிடம் விளக்கம் அளித்தார்.

குடிபோதையில் குளத்தில் உறங்கிய நபர்

இதையடுத்து போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE