சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்... செல்போனில் முன்பதிவு செய்யலாம்!

By காமதேனு

முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு வருகிற மே 3, 4 மற்றும் மே 5-ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு பேருந்துகள்

அதன்படி தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் நாளை ( மே 3) 290 பேருந்துகளும், மே 4-ம் தேதி 365 பேருந்துகளும் மற்றும் கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மே 3 மற்றும் மே 4-ம் தேதிகளில் 55 பேருந்துளும் இயக்கப்படுகின்றன. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வார இறுதியில் வெள்ளிக்கிழமை 5,827 பயணிகளும் சனிக்கிழமை 3,831 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 6,522 பயணிகளும் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். எனவே, நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in, http://www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE