ஜார்கண்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும் மின்னல் தாக்கியதாலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் சாலைகள், சிறிய பாலங்கள், ஆகியவை சேதமடைந்துள்ளன. இதில் 8 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர். தலைநகர் ராஞ்சியின் லால்பூர் பகுதியில் நிரம்பி வழிந்த சாக்கடையில் தவறி விழுந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பிரசாத் (எ) சோட்டு என்ற அந்த நபரின் உடல் சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டது. இதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மழை காலங்களில் வெட்டவெளிகளிலும், மரங்களின் அடியிலும் நிற்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் வசிப்போர் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
புரட்டாசியில் பெருமாளையும், தாயாரையும் இப்படி வழிபட்டால் தரித்திரம் விலகும்!
சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி ஆவேசம்!
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!