காரைக்குடியில் பெய்த மழையில் தூரோடு சாய்ந்த வேப்பமரம் மீண்டும் நடவு

By KU BUREAU

காரைக்குடி: காரைக்குடியில் பெய்த மழையில் தூரோடு சாய்ந்த வேப்பமரத்தை நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் மீண்டும் நடவு செய்தனர்.

காரைக்குடியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதில் 100 அடி சாலையோரத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. இதையடுத்து நமது உரிமை பாதுகாப்பு இயக்கத் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான பிரகாஷ் தலைமையில் அந்த இயக்கத்தினர் சாய்ந்த வேப்பமரத்தை மீண்டும் நடவு செய்ய முடிவு செய்தனர். மரத்தின் கிளைகளை கவாத்து செய்து, மாட்டுச் சாணத்தை தடவினர்.

பின்னர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் 4 அடி குழி தோண்டி மீண்டும் மரத்தை நடவு செய்தனர். மரத்தை பராமரிக்கும் பணியை நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர், வர்த்தகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE