தனிக் கட்சியா... ஆதரவாளர்கள் மத்தியில் ஓபிஎஸ் ஓபன் டாக்!

By குள.சண்முகசுந்தரம்

எந்தக் காலத்திலும் அதிமுகவை விட்டு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வன்.

நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்குச் சாதகமான இல்லாத நிலையில் அடுத்தகட்ட முடிவு குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறார். இது தொடர்பாக ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற குழுவை உருவாக்கி இருக்கும் ஓபிஎஸ், இன்று அதன் முதல் கூட்டத்தை சென்னையில் கூட்டினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோப்பு புகைப்படம்

இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான ஜே.சி.டி.பிரபாகரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ ‘அதிமுக தொடண்டர்கள் உரிமை மீட்பு குழு’ என்பது தற்காலிக அமைப்பு தான். எந்தக் காலத்திலும் அதிமுகவை விட்டு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.

ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை

நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நமக்குச் சாதமாகவே வரும். விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. தேர்தலை சந்திக்க கீழ் மட்டம் வரை நமது கட்டமைப்பு பலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உண்மையான தொண்டர்களின் உரிமையை நிச்சயமாக மீட்டெடுப்போம்” என நம்பிக்கை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE