வண்டலூர் அருகே ஏரியில் தத்தளித்த தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் உயிரிழப்பு

By பெ.ஜேம்ஸ் குமார்

வண்டலூர்: வண்டலூர் அருகே ஏரி நீரில் தத்தளித்த தம்பியை மீட்க சென்ற போது அண்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

வண்டலூர் அருகே வேங்கடமங்கலம், பொன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மோகன் என்பவரது மகன்கள் ஹரிகரன் (13) கண்டிகை, அரசு பள்ளியில் 8- வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகன் முகேஷ் (11) ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பகல் சுமார் 2 மணி அளவில் அண்ணன் - தம்பி இருவரும் வீட்டின் அருகில் உள்ள ரத்தினமங்கலம் தனியார் மருத்துவ கல்லூரி அருகிலுள்ள ஏரியில் நண்பர்களுடன் குளித்தனர். அப்போது நீரில் தம்பி முகேஷ் மூழ்கினர். தம்பியின் அலறல் சத்தத்தை கேட்ட அண்ணன் ஹரிகரன் தம்பியை காப்பற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அண்ணன் தம்பி இருவரையும் காப்பாற்றி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிகரன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாழம்பூர் போலீஸார் ஹரிகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தாழம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE