சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

By KU BUREAU

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தல்நாயக்கன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் சுற்றுப்புறத்தில் சில கிலோ மீட்டர் தொலைவு வரை உணரப்பட்ட நிலையில், விபத்து குறித்து தகவலறிந்து சாத்தூர் மற்றும் சிவகாசி வட்டத்தில் இருந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE