பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல்: மத்திய அரசிடம் டிட்கோ நிறுவனம் விண்ணப்பம்

By KU BUREAU

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு விண்ணப்பித் துள்ளது.

சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில், 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஈடுபட்டுள்ளன.

தமிழக தொழில்துறை அனுமதி: இந்நிலையில், விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதி அளி்த்துள்ளது. இதற்கான அரசாணையில், இந்த திட்டத்துக்காக 5,746.18 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774.01 ஏக்கர் மற்றும் அரசு நிலம் 1,972.17 ஏக்கர் கையகப்படுத்தப்படு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில எடுப்பு பணிகள் தீவிரம்: தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி, ரூ.1,822.45 கோடி இழப்பீடும் நிர்வாக செலவுடன் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது பரந்தூர் விமான நிலையத்துக்கான நில எடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.இதையடுத்து, சுற்றுச்சூழல் அனுமதி கோரி, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத் தும், தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இம்மாத தொடக்கத்தில் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து அனுமதியளித்தது.

இந்நிலையில், தற்போது, பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல்பெறுவதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசிடம் டிட்கோ சமர்ப்பித் துள்ளது. இந்த விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலித்து விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE