துப்பாக்கியால் மிரட்டி ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அட்டூழியம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை நள்ளிரவில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் மிரட்டி விரட்டியடித்தனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப் படகுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது எனச் சொல்லி துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டனர்.

இதனால் உயிருக்கு பயந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் பலர் கடலில் விரித்திருந்த தங்கள் வலைகளைகூட எடுக்காமல் கரை திரும்பியதாகவும், மீன்பாடு இல்லாத பகுதிகளுக்குச் மீன்பிடிக்காமலேயே ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் இன்று ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் கூறினர்.

இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி இருக்கும் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE