பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு 200 பேர் மனு

By KU BUREAU

காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பொதுமக்களின் குடியிருப்புகள், நீர் நிலைகள் உட்பட 13 கிராமங்களைச் சேர்ந்த 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட உள்ளன.

இந்நிலையில் ஏகனாபுரம் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கான இரு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தங்கள் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200 பேர் அந்த கிராமத்தில் இருந்து வந்து காரை கிராமத்தில் உள்ள நிலம் எடுப்பு அலுவலகத்தில் ஆட்சேபம் தெரிவித்து மனு அளித்தனர். பின்னர் அங்கிருந்து விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டவாறு புறப்பட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE