மநீம கட்சியின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன்: பொதுக்குழுவில் தீர்மானம்!

By KU BUREAU

சென்னை: மநீம கட்சியின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம், மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், 1,414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2,570 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஒவ்வொரு சட்டமன்றத்திலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 5 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரு பூத்துக்கு 5 நபர் நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோல, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்m பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE