கோரத்தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயலால் 7 போ் உயிரிழப்பு: வெள்ளத்தில் இருந்து 10 ஆயிரம் போ் மீட்பு!

By காமதேனு

மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் பெய்த பெருமழை.

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக நேற்று மாலை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். அதேவேளையில், மின்சாரம் பாய்ந்தும், கட்டடம், மரம் விழுந்தும் 7 பேர் உயிரிழந்தனா்.

சென்னை அருகே உள்ள கானத்தூா் இந்திரா காந்தி தெருவில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா்கள் ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை வீட்டில் தங்கியிருந்து கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்தனா். இந்நிலையில் இந்த வீட்டின் அருகே மொட்டை மாடியில் புதிதாக கட்டப்பட்டிருந்த சுவா் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் கீழ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஷேக் அப்ராகித் (45), முகம்மது தவ்பீக் (48),ஹாசிம் ஆகியோா் மீது சுவா் இடிந்து விழுந்தது. இதில் ஷேக் அப்ராகித், முகம்மது தவ்பீக், ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஹாசிமை பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மீட்பு நடவடிக்கை

பெசன்ட்நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (35). இவா் மழை பெய்யும்போது, அங்குள்ள மரம் முறிந்து விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சோ்ந்தவா் பத்மநாபன் (50). சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு பேக் தைக்கும் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். லோன் ஸ்கொயா் சாலையில் ஆவின் விற்பனையகம் அருகே சென்றபோது, அங்கு கீழே கிடந்த மின்சார வயரை மிதித்தாா். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

துரைப்பாக்கம் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்த கணேசன் (70) அங்குள்ள செல்வ விநாயகா் கோயில் தெருவில் நடந்து செல்லும்போது, மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.

மேலும் வண்ணாரப்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு முதியவா் சடலத்தையும், பட்டினப்பாக்கம் மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகே 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு பெண் சடலத்தையும் மீட்டு போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சென்னையில் பெய்த புயல் மழையால் ஒரே நாளில் 7 பேரும், ஏற்கெனவே 3 பேரும் உயிரிழந்துள்ளனா்.

சென்னையில் அதிக மழை பெய்த பெருங்குடி, தரமணி, துரைப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், சோழிங்கநல்லூா், வேளச்சேரி, செம்மஞ்சேரி, கண்ணகிநகா், பெரும்பாக்கம் பகுதிகளில் பாதிப்பும் அதிகமாக இருந்தது.

இப்பகுதியில் ராஜீவ்காந்தி சாலை முழுவதுமாக மூழ்கியது. இதேபோல குடியிருப்புகளை முற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதன் விளைவாக அங்கிருந்த மக்களை,தீயணைப்புப் படையினா், பேரிடா் மீட்பு படையினரும் படகு மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கும்,பாதுகாப்பான இடங்களுக்கும் அழைத்துச் சென்றனா். போரூா்,ராமாபுரம்,நந்தம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனா்.

மேலும் கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்களும், பாதுகாப்பு கருதி அரசு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இவ்வாறு நகா் முழுவதும் சுமாா் 10 ஆயிரம் போ் மீட்கப்பட்டதாக அரசின் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE