மாணவிகளின் வளைகாப்பு `ரீல்ஸ்' விவகாரம்: அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்; தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ்

By KU BUREAU

வேலூர்: அரசுப் பள்ளியில் மாணவிகள் சேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதுபோல இன்ஸ்டாகிராமில் `ரீல்ஸ்' வெளியிட்ட விவகாரத்தில், ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பள்ளி தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் மாணவிகள் சிலர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சக மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்துவதுபோல ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். மேலும், அதை வீடியோவாக எடுத்து, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இது தொடர்பாக மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் மணிமொழி விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், அந்தப் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார். இதையடுத்து, ஆசிரியை சாமுண்டீஸ்வரி என்பவரை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிதலைமை ஆசிரியை பிரேமா மற்றும்பணியில் இருந்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கிஉள்ளார்.

மாணவிகளுக்கு அறிவுறுத்தல்... இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, "மாணவிகள் வளைகாப்பு நடத்தியதுபோல ரீல்ஸ் வெளியிட்டதை தொடர்ந்து, மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் மதிய உணவின்போது மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்களும் அமர்ந்து உணவுசாப்பிட வேண்டும் என்றும், பள்ளிக்குவரும் மாணவர்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, வகுப்பு ஆசிரியர்கள், பாடப் பிரிவு ஆசிரியர்கள் ஆகியோர், பாடவேளை வாரியாக மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவேட்டை முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE