மோடி பிறந்தநாள்: திருச்சியில் தங்கத்தேர் இழுத்த பாஜகவினர்!

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் பாஜகவினர் தங்கத் தேர் இழுத்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் இன்று (செப்.17) இரவு 7 மணிக்கு மேல் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர், தங்கத்தேர் இழுக்கும் வைபவம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஆர்.கோபிநாத், முன்னாள் மாவட்டத் தலைவர் பார்த்திபன், துணைத் தலைவர் சர்வேஸ்வரன், செயலாளர் ஜெயந்தி ஆகியோர் கோயிலின் உட்பிரகாரத்தில் தங்கத் தேர் இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஸ்ரீரங்கம் முரளி செய்திருந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீரங்கம் மண்டல நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE