ஹெச்.ராஜாவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பு குழு தலைவர் எச்.ராஜா அவதூறாக விமர்சித்ததாக கண்டித்து குமரி மாவட்டம் நாகர்கோவில் கருங்கல்லில் காங்கிரஸார் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருங்கல் ஆட்டோ நிறுத்தம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விஜய் வசந்த் எம்பி துவக்கி வைத்தார். தாரகை கத்பர்ட் எம்எல்ஏ, காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், மீனவர் பிரிவு மாநில தலைவர் ஜோர்தான் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

இதைப்போல் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE