பிரதமர் மோடியின் உருவத்தை சூரிய ஒளி மூலம் வரைந்த சிவகாசி மாணவர்!

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி அரசு கலைக் கல்லூரி மாணவர் கார்த்திக், பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு சூரிய ஒளி மூலம், பிரதமரின் உருவப் படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சிவகாசி அரசு கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். பள்ளி பருவத்திலேயே ஓவியம் வரைவதில் ஆர்வமுடன் இருந்த கார்த்திக், தற்போது கண்ணாடி லென்ஸை பயன்படுத்தி சூரிய ஒளி மூலம் பிரபலங்களின் உருவப் படத்தை வரைந்து அசத்தி வருகிறார். ரப்பர் பலகையில் பேப்பரை வைத்து, கண்ணாடி லென்ஸ் மூலம் சூரிய ஒளி கதிர்களை பேப்பரில் பட வைத்து ஓவியமாக வரைந்து வருகிறார்.

அந்த விதத்தில் செப்டம்பர் 17ம் தேதியான இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு, சூரிய ஒளியில் பிரதமரின் உருவப் படத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார் கார்த்திக்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE