நீலகிரி - குந்தாவில் குடிநீர் பிரச்சினைக்கு ‘குட் பை’

By ஆர்.டி.சிவசங்கர்

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவுக் குட்பட்டது கீழ்குந்தா பேரூராட்சி. இதில் மஞ்சூர் பஜார், மஞ்சூர் ஹட்டி, கரியமலை, பாக்கோரை, கீழ்குந்தா, மட்டக்கண்டி, தூனேரி, ஓணிக்கண்டி, குந்தா பாலம், முள்ளிமலை, காந்திபுரம், பெரியார் நகர், கெச்சிகட்டி, தொட்டக்கம்பை, கெத்தை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 15 வார்டுகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

கீழ்குந்தா பேரூராட்சிக்கு அம்மக்கல், கட்லாடா உள்ளிட்ட நீராதாரங்கள் மூலமாக, ஆங்காங்கே அமைக்கப்பட்ட மேல்நிலை தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீர் வார்டுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் நீராதார பகுதிகளில் ஆக்கிரமிப்பு, பராமரிப்பு பணியில் தொய்வு, மழைக்காலங்களில் அடித்துவரப்பட்ட சேறும், சகதியும் தடுப்பணைகளில் நிறைந்து தூர்வாரப் படாதது உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் சேமிக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

  காமதேனு தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE