பாம்பன் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக இரு நாட்கள் மூடல்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் ஊராட்சியில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்புகளுக்காக நாளையும், நாளை மறுதினமும் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராமேசுவரம் அருகே பாம்பனில் புதிய ரயில் பாலப் பணிகளும், பாம்பன் ரயில் நிலையத்தில் மராமத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் பாம்பன் ரயில்வே கேட், தண்டவாளம், அதிலுள்ள சாலை ஆகியவற்றை பராமரிப்பு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், இன்று வியாழக்கிழமை காலை 10 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரையிலும் பாம்பன் ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும். எனவே பயணிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE