சம்மன் எதுவும் வரவில்லை சட்டப்பேரவை தலைவர் மறுப்பு

By KU BUREAU

திருநெல்வேலி: அதிமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்திலிருந்து சம்மன் வரவில்லை என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி. உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நேற்று தொடங்கிவைத்த அப்பாவு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் நடந்த விழாவில் நான் ஏதோ ஒரு கருத்தைக் கூறியதாக, அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த சம்மனும் இதுவரை எனக்கு வரவில்லை. நீதிமன்ற சம்மனை திருப்பி அனுப்பி விட்டதாக வரும் செய்திகள் தவறானது. நான் நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவன். எனக்கு எந்த சம்மனும் வரவில்லை என்பதே உண்மை.

அதேநேரத்தில், நீதிமன்ற சம்மன் வந்தாலும் வராவிட்டாலும், எனது வழக்கறிஞர் ஆலோசனைபடி வரும் 13-ம் தேதி நான் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE