தமிழக மீனவர்கள் 10 பேருக்கு செப்.18 வரை 4-வது முறையாக காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 18 வரையிலும் காவல் நீட்டிக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்திலிருந்து அந்தோனி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை கடந்த ஆகஸ்ட் 5 அன்று இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதையடுத்து 10 மீனவர்கள் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து 10 மீனவர்களும் புத்தளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி விமல ரத்னா, மீனவர்கள் 10 பேருக்கும் செப்.18ம் தேதி வரை நான்காவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE