உசிலம்பட்டி | சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட 20க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகள்: உயிருக்கு போராடிய பரிதாபம் 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: உசிலம்பட்டி அருகே சாலையோரம் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட 20க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகள் உயிருக்கு போராடும் அவல நிலை அந்த வழியே சென்றவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி விருவீடு அருகே தேனி செல்லும் சாலையில் பிறந்து சில நாட்களே ஆன 20 க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை யாரோ சாக்கு மூட்டையில் கட்டி, சாலையோரத்தில் போட்டு விட்டு சென்றது தெரிந்தது. அந்த நாய்குட்டிகளில் ஒரு சில குட்டிகள் உயிரிழக்கும் நிலையிலும், பிற குட்டிகள் பசியோடும் துடித்துக் கொண்டிருந்தன. இது பற்றி தகவல் அறிந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த நாய்குட்டிகளை மீட்டு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுபோன்று தெருக்களில் சுற்றி தெரியும் நாய்குட்டிகளை தாயுடன் இருந்து பிரித்து சாலைகளில் வீசி சென்ற நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

20க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகள் சாலையோரத்தில் வீசப்பட்ட நிலையில், நாய்குட்டிகள் உயிருக்கு போராடும் பரிதாபமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE