மீஞ்சூர் அருகே தனியார் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு குழாய் உடைப்பு: பொதுமக்கள் அச்சம்

By இரா.நாகராஜன்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே தனியார் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு குழாய் உடைந்து, கசியும் எரிவாயுவால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வெள்ளிவாயல்சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நிலத்தின் அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம் 3 மணியளவில் வெள்ளிவாயல்சாவடி பகுதியில், கொசஸ்தலை ஆற்றையொட்டியுள்ள நிலத்தின் அடியில் புதைக்கப்பட்ட இயற்கை எரிவாயு குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதனால் குழாயிலிருந்து கசியும் இயற்கை எரிவாயுவால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், இது குறித்து தகவலறிந்த தனியார் நிறுவன அதிகாரிகள், சென்னைக்கு இயற்கை எரிவாயு அனுப்புவதை நிறுத்தி, குழாய் உடைப்பை சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE