தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடைபெற்றது.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கலைத் திருவிழாவிற்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முகமது ரியாலுதீன் தலைமை வகித்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி சரண்யா, பள்ளி மேலாண்மை குழு சார்பாக உறுப்பினர் மரிய அபிலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மூதுநிலை ஆசிரியர்கள் முத்து வித்யா, விக்டோரியா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி மாணவி சர்வ சுபிக்ஷா வரவேற்புரையாற்றினார்.

ஆசிரியத் தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகள் கவிதை மற்றும் பாடல்களைப் பாடினர். தொடர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE