மகிழ்ச்சியில்லாத ஆசிரியர் தினம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் @ மதுரை

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: ‘மகிழ்ச்சியில்லாத, கொண்டாட்டமில்லாத ஆசிரியர் தின’த்தை கடைபிடித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் க.முனியாண்டி தொடங்கி வைத்தார். அச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ச.கார்த்திகேயன் கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் முன்னாள் மாநில தலைவர் கே.பி.ஒ.சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், மாவட்டப் பொருளாளர் தி.ராமசாமி நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE