பொத்தேரியில் கல்லூரி மாணவர் தற்கொலை

By KU BUREAU

பொத்தேரி: ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த கொண்டா ஸ்ரீனிவாச நிக்கில் (20), சென்னையை அடுத்த பொத்தேரியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ளபிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் பி.டெக் 4-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இவர் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு தாம்பரம் மாநகர போலீஸார் 1,000 பேர் ஒரே நேரத்தில் கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாணவர் நிக்கில் உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் விசாரித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த நிக்கில் நேற்று முன் தினம் இரவு, தான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழேகுதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிக்கில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE