பி.எஃப் அலுவலக ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சருடன் நாராயணன் திருப்பதி சந்திப்பு

By KU BUREAU

சென்னை: பிஎஃப் அலுவலக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

தாம்பரத்தில் பி.எஃப் (தொழிலாளர் வைப்பு நிதி) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.

அதில், தாம்பரத்தில் இயங்கி வரும் தொழிலாளர் வைப்பு நிதிஅலுவலகம் போதிய இடவசதியின்றி வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அதிகாரிகள், ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணத்தால் பணி செய்வதிலும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன.

எனவே, பிஎஸ்என்எல் அலுவலகத்துக்குச் சொந்தமான இடத்தில், பி.எஃப் அலுவலகத்தை இடம்மாற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். இதேபோல், ஊழியர்கள் பற்றாக்குறையை போக்குவது, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவது, ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் மனுவை வழங்கினர். இந்த சந்திப்பின்போது, சங்கத்தின் நிர்வாகிகள் சந்திரசேகர், வேலுஉள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE