தமிழகத்தில் செப்.9 வரை மழை பெய்ய வாய்ப்பு

By KU BUREAU

சென்னை: ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப்.4) இடி, மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழையும், நாளை முதல் செப்.9-ம் தேதிவரை மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னை, புறநகர் பகுதிகளில்இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் செப்.7-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE