செப்.17-ல் திமுக முப்பெரும் விழா: கருணாநிதி விருது ஜெகத்ரட்சகனுக்கு அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் வரும் செப்டம்பர் 17-ம் தேதி திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு, பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக பவளவிழா ஆண்டை முன்னிட்டு, வரும் செப்.17-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ திடலில், திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் முப்பெரும் விழாவில், பல்வேறு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், இந்தாண்டு முப்பெரும் விழாவில், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும், கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE