தமிழகம் முழுவதும் ஆக.31-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்

By KU BUREAU

சென்னை: ஆக.31-ம் தேதி நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்பதால் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப் படுவதில்லை.

ஆனால், இம்மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் ஆக.31-ம் தேதி அனைத்து நியாயவிலைக் கடைகளும் இயங்கும். அன்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்துக்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE