ராகுலை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு

By KU BUREAU

சென்னை: அதிமுக மதுரை மாநகர் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு நேற்றுமுன்தினம் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, ‘நான் பார்த்துநெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப்பதிவு அதிமுக மற்றும் அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மையில் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சிலர்போர்க்கொடி தூக்கி உள்ளதாக தகவல் பரவியது. அதன் பின்னணியில் திமுகவும், பாஜகவும் இருப்பதாகவும், அதிமுகவை பலவீனப்படுத்த அவர்கள் திட்டமிடுவதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் செல்லூர் ராஜுவின் ராகுல் காந்தி பற்றிய பதிவு, கட்சியில் கடும் எதிர்ப்பைஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா கூறும்போது, ராகுல் காந்தியை செல்லூர் ராஜு புகழ்ந்தது, அவரது தனிப்பட்ட கருத்து. தேர்தல் நேரத்தில் அவர் இப்படி சொல்லியிருக்க வேண்டியதில்லை என்றார்.

அதேநேரத்தில், காங்கிரஸ்மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர்உள்ளிட்டோர், செல்லூர் ராஜுவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். தனக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், தனது எக்ஸ் வலைதளத்தில் இருந்து ராகுல் காந்தி பற்றிய பதிவை செல்லூர் ராஜு திடீரென நீக்கி விட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE