காஞ்சிபுரம் | ஆதரவற்றோர் இல்லத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா

By KU BUREAU

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே கலியாண்பூண்டி கிராமத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. பிறந்த நாளையொட்டி அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.

அப்போது ஆதரவற்ற குழந்தைகள் ஒன்றிணைந்து நன்றி கூறியபடி பாடல் பாடி தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது தேமுதிக தொண்டர்கள் கண் கலங்கினர்.

தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE