தமிழகம் முழுவதும் ஆக.27-ல் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

By KU BUREAU

சென்னை: இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வங்க தேசத்தில் நடக்கும் கலவரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதிக்கவில்லை. தற்போது நீதிமன்றம் மூலம் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த வகையில், நீதிமன்ற வழிகாட்டுதல்படி வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் வரும் 27-ம் தேதி மதியம் 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE