கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்த 10 பேர் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றனர். சீனு (22) என்பவர் காரை ஓட்டினார்.

திருவண்ணாமலையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் பெங்களூருவுக்குப் புறப்பட்டனர். திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில், சிங்காரப்பேட்டை ஏரிக்கரை அருகே வரும்போது, இவர்களது கார் மீது ஆந்திராவில் இருந்து வந்த சரக்கு வாகனம் மோதியது.

இதில் சீனு, அவரது தாயார்பாப்பாத்தியம்மாள் (55), உறவினர் சாமிலா(22) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்களை மீட்ட போலீஸார், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து குறித்துசிங்காரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சரக்கு வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE