பள்ளி பேருந்து மீது பைக் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது பைக் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிர் இழந்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(40). இவரது மனைவி பஞ்சு (35), மகன் ஸ்ரீதர் (6). இவர்கள் மூவரும் நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்துக்கு பைக்கில் சென்றனர்.

நத்தம் அருகே புதுக்கோட்டை -முடக்குச்சாலை பகுதியில் முருகன்பைக்கை ஓட்டிச் சென்றார். அப்போது நத்தத்தில் இருந்து மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து மீது, எதிர்திசையில் சென்ற பைக் மோதியது. இதில் பைக்கில் சென்ற முருகன், பஞ்சு, ஸ்ரீதர் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த நத்தம் போலீஸார் 3 பேரின் உடல்களை மீட்டு,பிரேதப் பரிசோதனைக்காக நத்தம்அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் இறந்த முருகன் மாவு வியாபாரம் செய்துவந்ததும், நத்தத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குச் சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE