வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கோரி விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் மனு

By KU BUREAU

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக ஏகனாபுரம் கிராமம் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால்இந்தப் பகுதியில் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

வீட்டுமனை பட்டா: இந்நிலையில் “உங்களுடன் உங்கள் ஊரில்” என்ற நிகழ்ச்சி காஞ்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நியாயவிலை கடை, பஞ்சாயத்து அலுவலகம் போன்ற கட்டிடங்களை கட்ட வேண்டும், இலவச வீட்டுமனை பெறாத பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டாக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தும் மனுக்களை அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE