நெல்லையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கச் சென்ற 2 பெண்கள் சாலை விபத்தில் பலி

By அ.அருள்தாசன்

நெல்லை: கிழக்கு கடற்கரைச் சாலையில் காரும் ட்ரக்கரும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகினர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள புலிமான் குளத்தைச் சார்ந்த 12 பேர் ட்ரக்கரில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக கன்னியாகுமரிக்குச் சென்றனர். அப்பொழுது கன்னியாகுமரியில் இருந்து உவரி நோக்கிச் வந்த ஒரு ஸ்கார்பியோ காரும் ட்ரக்கரும் கிழக்கு கடற்கரை சாலையில் தோட்டாவிளை அருகே நேருக்கு நேர் மோதியது.

இதில் ட்ரக்கரில் பயணம் செய்த புலிமான் குளத்தைச் சார்ந்த சந்தான குமாரி (38) மற்றும் முத்துச்செல்வி (24) ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் 10 பேருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE